டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா! இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்கு

Published by
Venu

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி  சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில் ஜடேஜா 4, பும்ரா நவ்தீப் சைனி தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட்டை பறித்தனர். பின்னர், இறங்கிய இந்திய அணி  இரண்டாம்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 45 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்தனர்.நேற்று  3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய இந்திய அணி 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில்  கம்மின்ஸ் 4, ஹேசில்வுட் 3, ஸ்டார்க் 1 விக்கெட்டை பறித்தனர். இதன் காரணமாக 94 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.தொடக்க வீரர்களாக இறங்கிய டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி இறங்கினர். இவர்கள் இருவரும் வந்த வேகத்தில் டேவிட் வார்னர் 13, வில் புகோவ்ஸ்கி 10 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின் இறங்கிய மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் இருவரும் நிதானமாக விளையாடிய ரன்கள் சேர்த்தனர்.

3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 29 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் எடுத்தனர். இதனால், 197 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்து வந்தது. இன்று 4-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 87 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கிரீன் 84 ரன்கள்,ஸ்மித் 81 ரன்கள் அடித்தனர்.இதனால் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்திய அணியின் பந்துவீச்சில் சைனி , அஸ்வின் இருவரும் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.இதனைத்தொடர்ந்து 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

Published by
Venu

Recent Posts

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…

6 hours ago

தவெக-வின் பொதுச் செயலாளர் ஆகிறார் IRS அதிகாரி அருண்ராஜ்.?

சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…

7 hours ago

SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…

9 hours ago

அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!

அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…

9 hours ago

ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!

நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…

10 hours ago

RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…

11 hours ago