ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இன்று முதல் டி-20 தொடர் தொடங்கவுள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. அதனைதொடர்ந்து இன்று முதல் டி-20 தொடர் தொடங்கவுள்ளது.
அதன்படி இன்று தொடங்கவுள்ள முதல் டி-20 போட்டி, கான்பெராவின் ஓவன் மைதானத்தில் இந்திய நேரப்படி பகல் 1:40 மணிக்கு தொடங்கவுள்ளது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றிய நிலையில், இந்த டி-20 தொடரை கைப்பற்றும் நோக்குடன் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அதிரடியாக பந்துவீசிய நிலையில், இன்றைய போட்டியில் அவர் தனது முதல் சர்வதேச டி-20 தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய அணி சார்பில் இன்றைய போட்டியில் சுப்மன் கில், யுஸ்வேந்திர சாஹல் களமிறங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…