BCCI – PCB : பாகிஸ்தானில் எங்களுக்கு ராஜ மரியாதை கிடைத்தது.! பிசிசிஐ தலைவர் நெகிழ்ச்சி.!

Published by
மணிகண்டன்

இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஐசிசி கோப்பை தொடர்கள் , ஆசிய கோப்பை தொடர்களை தவிர்த்து இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் சுற்று பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் போன்ற போட்டி தொடர்களில் சமீபத்திய ஆண்டுகளில் பங்கேற்கவேயில்லை. கடைசியாக 2012இல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்ததே சர்வதேச தொடர்களை தவிர்த்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டி தொடராகும்.

இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வரவுள்ளது. அதற்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தலைவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாட்டு அணிகளும் பங்கேற்றுள்ளன. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் வங்கதேச கிரிக்கெட் அணியும் மோதின. இந்த போட்டியை நேற்று லாகூர் மைதானத்தில் வைத்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பென்னி, துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.

சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பின் பெயரில் அங்கு சென்று கிரிக்கெட் போட்டியை கண்ட பிறகு பேசிய பிசிசிஐ தலைவர் ரோஜர்  பென்னி, பாகிஸ்தானில் எங்களுக்கு ராஜ மரியாதை கிடைத்தது.

நல்ல விருந்தோம்பல் அளிக்கப்பட்டது. எங்களை சிறப்பாக நடத்தினர். பாகிஸ்தானுடன் நேரடி இருநாட்டு தொடர் மீண்டும் எப்போது நடைபெறும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது தீர்மானிக்க முடியாது. இந்த விஷயத்தில் தீர்மானிக்க வேண்டியது இரு நாட்டு அரசுகளும் தான் என பாகிஸ்தான் சென்று திரும்பிய பிசிசிஐ தலைவர் ரோஜர் பென்னி தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

12 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

13 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

14 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

14 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

15 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

16 hours ago