#BREAKING: கிரிக்கெட் வீரர்களின் போட்டி ஊதியம் உயர்வு – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டி ஊதியம் உயர்த்தப்படுகிறது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் உயர்த்தியுள்ளது. அதன்படி, 40 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ள மூத்த வீரர்களுக்கான போட்டி ஊதியம் ரூ.60,000 உயர்த்தப்படுகிறது. அதே நேரத்தில், 23 வயதுக்குட்பட்ட வீரர்களின் போட்டி ஊதியத்தை ரூ.25,000 ஆகவும், 19 வயதுக்குட்பட்ட வீரர்களின் கட்டணத்தை ரூ.20,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் வீரர்களின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டி கட்டண உயர்வை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

இது தவிர, உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட முந்தைய சீசனுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் 50 சதவீத இழப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கும் என தகவல் கூறப்படுகிறது.

ரஞ்சி கோப்பையில், ஒரு வீரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.35,000 மற்றும் ஒரு போட்டி கட்டணத்திற்கு ரூ.1.4 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கிரிக்கெட் வாரியம் வழங்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

17 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

18 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

19 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

19 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

21 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

22 hours ago