இன்று பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அணிக்கு ஜோஸ் பட்லர் திரும்ப உள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஸ் செய்து இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் காயத்தில் இருந்து மீண்ட பட்லர் களமிறங்குவார் என கூறப்படுகிறது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜோஸ் பட்லர் இன்று பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் அணிக்கு திரும்ப உள்ளார். பட்லருக்கு அனுபவம் உண்டு, அவர் வரிசையில் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்று இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பால் கோலிங்வுட் கூறினார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…