பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

Published by
அகில் R

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் டி20 உலகக்கோப்பைக்காக இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான வீரர்கள் வருகிற மே 25-ம் தேதி நியூயார்க் செல்ல உள்ளனர். ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் விளையாடும் அணிகளில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களை தவிர மீதம் இருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் மே-25 ம் தேதி நியூயார்க் புறப்படுவார்கள் என்று தெரிகிறது.

அதே போல மீதம் உள்ள அதாவது ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் விளையாடும் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் மே 26-ம் தேதி நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியில் கலந்து கொண்டு அடுத்த நாளான மே-27-ம் தேதி அன்று நியூயார்க் புறப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிகிறது. இதனால், ஐபிஎல் தொடர் அணிகளில் டி20 அணியில் இடம்பெற்றிருக்கும் அதிக வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா என 4 வீரர்கள் மும்பை அணியிலும், ரிஷப் பண்ட், குலதீப் யாதவ், அக்சர் பட்டேல் என 3 வீரர்கள் டெல்லி அணியிலும், பஞ்சாப் அணியின் ஹர்ஷதீப் சிங் என மொத்தம் 8 வீரர்கள் மே 25-ம் தேதி புறப்படுவார்கள் என்று தெரிகிறது.

மேலும், ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், சாஹல், சென்னை அணியில் சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, கொல்கத்தா அணியில் இருக்கும் ரிங்கு சிங் ஆகியவர்களில் இறுதி போட்டிக்கு செல்லும் அணியில் இருப்பவர்களை தவிர மற்ற வீரர்களும் இவர்களுடன் புறப்படுவார்கள் மே 25-ம் தேதி அன்று புறப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து வருகிற ஜூன் 1-ம் தேதி அன்று ஒரு புறம் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கினாலும் மறுபுறம் இந்திய அணியும், வங்காளதேச அணியும் டி20 உலகக்கோப்பைக்கான வார்ம் அப் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதை தொடர்ந்து ஜூன் 5-ம் தேதி அன்று இந்திய அணி தனது முதல் டி20 உலகக்கோப்பைக்கான போட்டியை அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

5 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago