இன்ஸ்டாகிராமில் 70 லட்சம் ஃபாலோவெர்ஸ்களைப் பெற்ற முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அணிகளில் முதன்மையானதாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(சிஎஸ்கே).மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி,அனைத்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.வேறு எந்த அணியும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர் பட்டாளம் நிறைய உள்ளனர்.இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் சிஎஸ்கே அணி தனக்கான கூட்டத்தை கவர்ந்து வருகிறது.
அதன் படி,சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 70 லட்சம் ஃபாலோவெர்ஸ்களைப் பெற்றுள்ளது.அதனைக் கொண்டாடும் விதமாக,தோனியின் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் சென்னை அணியை அடுத்து, 69 லட்சம் ஃபாலோவெர்ஸ்களைப் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.அதனை தொடர்ந்து,பெங்களூர் ராயல் சேலஞ் அணி 61 லட்சம் ஃபாலோவெர்ஸ்களுடன் 3 வது இடத்தில் உள்ளது.மேலும்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசெர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 20 லட்சத்துக்கும் மேலான ஃபாலோவெர்ஸ்களை கொண்டுள்ளது.கடைசி’ இடத்தில்,16 லட்சம் ஃபாலோவெர்ஸ்களுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளது.
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…