டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் இறுதியில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ஐபிஎல் தொடர் நடைபெறுமா..? அல்லது ஒத்தி வைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், பிசிசிஐ இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருப்பதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தது.
இதனால், செப்டம்பர் 19 (இன்று ) முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து, 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளன. ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோத உள்ளன. இந்த ஐபிஎல் தொடர் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் லெவன்: முரளி விஜய், ஷேன் வாட்சன், ஃபஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, லுங்கி என்ஜிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மும்பை அணி வீரர்கள் லெவன்: ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், சூர்யகுமார் யாதவ், திவாரி, கிருனல் பாண்ட்யா, ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…