சென்னை அணி சாம்பியன்… மகிழ்ச்சியில் ஜடேஜாவை கட்டித்தூக்கும் தோனி.!

Published by
Muthu Kumar

நேற்றைய ஐபிஎல் பைனலில் சென்னை அணியை வெற்றி பெற வைத்த ஜடேஜாவை தோனி நெகிழ்ச்சியில் கட்டித் தூக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

CSKChamp [Image-Twitter/@IPL]

ஐபிஎல் 2023 தொடர் இறுதிப்போட்டியில் நேற்று சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை வென்றது. முதலில் பேட் செய்த் குஜராத் அணி 20 ஒவர்களில் சாய் சுதர்சன்(96 ரன்கள்) மற்றும் சஹா(54 ரன்கள்) அதிரடியால் 214 ரன்கள் குவித்தது. இதன்பின் சென்னை அணி களமிறங்கியதும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக்வர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Rutu-Conway [Image- Twitter/@IPL]

ருதுராஜ் மற்றும் கான்வே அதிரடியுடன் ஆட்டத்தை தொடங்கினர். அணியில் ஒவ்வொரு வீரரும் பொறுப்பை உணர்ந்து பவுண்டரிகள் மட்டும் அடிக்காமல் 1 மற்றும் 2 ரன்கள் அடித்து ஸ்ட்ரைக்கை மற்ற வீரருக்கும் கொடுத்து சிறப்பாக விளையாடினர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய சென்னை அணிக்கு இறுதியில் சில விக்கெட்களை இழந்து தடுமாற, அம்பத்தி ராயுடு முக்கியமான நேரத்தில் சில சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றியின் விளிம்பில் அழைத்து சென்றார்.

இறுதியில் ஜடேஜா தன் பங்கிற்கு அதிரடியைக் காட்ட, கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்படும் பொழுது சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்து சென்னையை வெற்றி பெறச்செய்தார். வெற்றிக்கான ரன்களை அடித்து விட்டு ஜடேஜா, தோனியை நோக்கி ஓட, தோனி ஆனந்த கண்ணீரில் நனைந்த படியே ஜடேஜாவை கட்டித் தூக்கிவிடுவார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மும்பையின் சாதனையை சமன் செய்து 5-வது சாம்பியன் பட்டம் வென்றது.

Published by
Muthu Kumar

Recent Posts

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

14 minutes ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

42 minutes ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

55 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

1 hour ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

1 hour ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

2 hours ago