இன்று நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 29 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து, மத்தியில் இறங்கிய பிரியாம் கார்க் , அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய பிரியாம் கார்க் அரைசதம் விளாசி கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர்.
165 ரன்கள் இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டு பிளெசிஸ், ஷேன் வாட்சன் இருவரும் களமிறங்கினர். வாட்சன் 1 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழக்க நிதானமாக விளையாடிய டு பிளெசிஸ் 22 விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால், சென்னை அணி மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து, மத்தியில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா அரைசதம் விளாசினார். பின்னர், டோனி 47* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…