இன்றைய 18-வது அணியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல்,மாயங்க் அகர்வால் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி மாயங்க் அகர்வால் 26 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய மந்தீப் சிங் 27 , நிக்கோலஸ் பூரன் 33 ரன்கள் எடுத்தனர்.
சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 63 ரன்கள் குவித்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 178 ரன்கள் எடுத்தனர்.
179 ரன்கள் இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி வந்தனர். இதனால், ஷேன் வாட்சன், டு பிளெசிஸ் இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை நிறைவு செய்தனர்.
பின்னர், இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஷேன் வாட்சன் 83*, டு பிளெசிஸ் 87* ரன்களுடன் களத்தில நின்றனர். இறுதியாக சென்னை அணி 17.4 ஓவரில் விக்கெட்டை இழக்காமல் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…