ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து, 4 ஆம் டெஸ்ட் போட்டி, இன்று முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்று தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகமானார். இந்நிலையில், இன்றைய முதல் போட்டியில் 64 ஓவரை வீசிய நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலி வீரர் மேத்யூ வேட் 45 ரன் எடுத்து விளையாடியபோது அவரது விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டியின் தனது விக்கெட் கணக்கை தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து, மீண்டும் 66 ஓவரை வீசிய நடராஜன் சதம் விளாசி அதிரடியாக விளையாடி வந்த லபுசானே விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால், நடராஜன் இதுவரை 14 ஓவர் வீசிய 2 விக்கெட்டை வீழ்த்தி 33 ரன்கள் கொடுத்துள்ளார். வலைப்பயிற்சியில் பந்து வீசி சென்று ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்றுவித கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமாகிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…