மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய செய்தது. 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரகர் 67 ரன்கள் எடுத்தார். சினே ராணா ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும், தீப்தி சர்மா 40 ரன்களும் எடுத்தனர். இந்த நான்கு பேரைத் தவிர எந்த ஒரு வீரரும் இரட்டை இலக்கத்தை எடுக்கவில்லை. பின்னர்
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி 43 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய மகளிர் அணி வரும் 10 ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் போட்டி முடிந்தபிறகு இந்திய மகளிர் அணியினர் பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூபின் 7 மாத குழந்தையை சந்திக்க சென்றனர். அங்கு அக்குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தனர். குழந்தையை பார்க்க இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான ஹர்மன்பிரீத் கவுர், ஜூலன் கோஸ்வாமி, ஸ்மிருதி மந்தனா மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். கடந்த ஆண்டு ஆடவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வானைக் கட்டிப்பிடித்தார். இதையடுத்து இரு அணி வீரர்களும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய வீரர்கள் ஆட்டத்தில் தோற்றாலும் இந்த உணர்வுக்காக பாராட்டப்பட்டனர்.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…