சர்ச்சைக்குள்ளான விராட் அவுட் – நடுவர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்..!

Published by
murugan

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்தியா தனது  முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர்.

28-வது ஓவரை அஜாஸ் படேல்  வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ராஸ் டெய்லரிடம் சுப்மான் கில்  கேட்சை கொடுத்தார். அவர் 71 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்தார். பின்னர் அஜாஸ் படேல்  30வது ஓவரில் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கட்டை பறித்தார்.

30வது ஓவரில் 2-வது பந்தில் புஜாரா 5 பந்துகள் விளையாடி ரன் எடுக்காமலும், இந்த ஓவரின் கடைசி பந்தில் விராட்டும் ரன் எடுக்காமலு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இருப்பினும் கோலி எல்.பி.டபிள்யூ அவுட் நடுவரின் முடிவால் சர்ச்சையை ஏற்படுத்தியது. அஜாஸ் படேல் வீசிய பந்து முதலில் கோலி பேட்டில் அடித்த பின்னர் காலில் அடித்தது. பீல்ட் அம்பயர் அவுட் கொடுத்தவுடன், மூன்றாவது நடுவரும் அவுட் கொடுக்க பீல்ட் அம்பயர் அனில் சவுத்ரியிடம் கோலி சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இறுதியில் கோலி கனத்த மனதுடன் பெவிலியன் சென்றார்.

பீல்ட் அம்பயர் மற்றும் மூன்றாவது நடுவர் இருவரும் தவறாக அவுட் கொடுத்ததாக  ரசிகர்கள் நடுவர்கள் மீது  சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்திய அணி 52 ஓவரில் 165 ரன் எடுத்து 4 விக்கெட்டை இழந்துள்ளது. அஜாஸ் படேல் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Published by
murugan
Tags: #INDvNZ

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

21 minutes ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

48 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

4 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago