மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர்.
28-வது ஓவரை அஜாஸ் படேல் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ராஸ் டெய்லரிடம் சுப்மான் கில் கேட்சை கொடுத்தார். அவர் 71 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்தார். பின்னர் அஜாஸ் படேல் 30வது ஓவரில் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கட்டை பறித்தார்.
30வது ஓவரில் 2-வது பந்தில் புஜாரா 5 பந்துகள் விளையாடி ரன் எடுக்காமலும், இந்த ஓவரின் கடைசி பந்தில் விராட்டும் ரன் எடுக்காமலு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இருப்பினும் கோலி எல்.பி.டபிள்யூ அவுட் நடுவரின் முடிவால் சர்ச்சையை ஏற்படுத்தியது. அஜாஸ் படேல் வீசிய பந்து முதலில் கோலி பேட்டில் அடித்த பின்னர் காலில் அடித்தது. பீல்ட் அம்பயர் அவுட் கொடுத்தவுடன், மூன்றாவது நடுவரும் அவுட் கொடுக்க பீல்ட் அம்பயர் அனில் சவுத்ரியிடம் கோலி சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இறுதியில் கோலி கனத்த மனதுடன் பெவிலியன் சென்றார்.
பீல்ட் அம்பயர் மற்றும் மூன்றாவது நடுவர் இருவரும் தவறாக அவுட் கொடுத்ததாக ரசிகர்கள் நடுவர்கள் மீது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்திய அணி 52 ஓவரில் 165 ரன் எடுத்து 4 விக்கெட்டை இழந்துள்ளது. அஜாஸ் படேல் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…