பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல் உள்ளார். கடந்த திங்கள்கிழமை இரவு மேக்ஸ்வெல்லுக்கு ஆன்டிஜென் சோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஆர்டி-பிசிஆர் சோதனையும் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் 12 வீரர்கள் மற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனாவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சரியாக விளையாடவில்லை. 8 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் அட்டவணையில் ஏழாவது இடத்தில் உள்ளனர்.
மேக்ஸ்வெல்லுக்கு ஆர்டி-பிசிஆர் முடிவு வரவில்லை, ஆனால் அதற்குள் ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட் எடுத்துக் கொண்டதில் கொரோனா தொற்று உறுதியானது. BBL மட்டுமின்றி, ஆஷஸ் தொடரிலும், சில வீரர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு பிசிசிஐ சில உள்நாட்டு போட்டிகளை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…