ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ப்பதற்கான முயற்சிகளை செய்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8 ம் தேதி முடிவடைந்தது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு மொத்தம் 7 பதக்கங்களை வென்றனர். இதில் சோப்ரா தங்கம் வென்றார், மீராபாய் சானு மற்றும் ரவி தஹியா வெள்ளி, பிவி சிந்து, பஜ்ரங் புனியா, லவ்லினா மற்றும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
சில காலமாக ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024-ல் பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலும், 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறவுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி தலைவர் கிரேக் பார்கிலே கூறுகையில், தெற்காசியாவில் எங்கள் ரசிகர்கள் 92% இருந்து வருகிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்காவில் 30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் ஒரு சிறந்த கூடுதலாக இருக்கும். ஆனால், ஒலிம்பிக் போட்டிகளில் பல சிறந்த விளையாட்டுகளும் இணைத்து கொள்ள முயற்சி செய்து வருவதால் கிரிக்கெட்டை சேர்ப்பது எளிதானது அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், கிரிக்கெட் எவ்வளவு சிறந்தது என்பதைக் காட்ட வேண்டிய நேரம் இது என்று நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்தார்.
இதற்கு முன் 1900 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் பங்கேற்றுள்ளது. இதில், இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும் விளையாடிது. அடுத்த வருடம் பிர்மிங்கமில் நடைபெறவுள்ள 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க தயாராக இருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார். லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஒலிம்பிக்கில் பதக்கங்களுக்காக விளையாடும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…