Csk won [file image]
CSKvsRCB : ஐபிஎல் 2024 தொடரில் சென்னை, பெங்களுரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க வீரரான ஃபாப் டுப்ளஸி சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார் சென்னை அணியின் தீபக் சஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டேவின் பந்து வீச்சை பவுண்டரிகள் விளாசி ஸ்கோரை உயர்த்தினார். அதை தொடர்ந்து, சரியான சமயத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி டுப்ளஸி விக்கெட்டை எடுத்து அசத்தினார்.
அவர் ஆட்டமிழந்த உடன் அடுத்தடுத்து விக்கெட்டை பெங்களூரு அணி இழந்து தடுமாறியது. பெங்களூரு அணி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும், மேக்ஸ்வெல்லும் சிறப்பாக விளையாடாமல் சொதப்பினார்கள். அதன் பிறகு களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இதனால் பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.
அதை தொடர்ந்து 174 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாடும், ரச்சின் ரவீந்திராவும் பவுண்டரிகளை அடித்தாலும், ருதுராஜ் 15 ரங்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். அதன் பின் களமிறங்கிய ரஹானேவும் சிக்ஸர் பவுண்டரிகள் அடித்தாலும் நிதானமாக விளையாடாமல் 19 பந்துகளில் 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியின் எந்த ஒரு வீரரும் அதிரடியாக விளையாடினாலும் நிதானமாக நின்று விளையாடாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனை தொடர்ந்து களத்தில் இருந்து ரவீந்திர ஜடேஜாவும், சிவம் துபேவும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியின் பாதைக்கு மெதுவாக அழைத்து சென்றனர். இருவரின் கூட்டணியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 25 ரன்களும், துபே 27 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்/.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…