ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 விக்கெட்களில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – உத்தப்பா களமிறங்கினார்கள்.
ருதுராஜ் டக் அவுட் ஆக, பின்னர் களமிறங்கிய சான்ட்னர் 11 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அம்பதி ராயுடு களமிறக்க, சிறப்பாக ஆடிவந்த உத்தப்பா 30 ரன்களில் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 13 ரன்களிலும், ஜடேஜா 3 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் தோனி களமிறங்கினர்.
கடைசி 4 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமின்றி மும்பை அணி, தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…