ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 விக்கெட்களில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – உத்தப்பா களமிறங்கினார்கள்.
ருதுராஜ் டக் அவுட் ஆக, பின்னர் களமிறங்கிய சான்ட்னர் 11 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அம்பதி ராயுடு களமிறக்க, சிறப்பாக ஆடிவந்த உத்தப்பா 30 ரன்களில் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 13 ரன்களிலும், ஜடேஜா 3 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் தோனி களமிறங்கினர்.
கடைசி 4 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனியின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமின்றி மும்பை அணி, தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…