#IPL2022: பந்துகளை பறக்கவிட்ட ஃபாப்.. பஞ்சாப் அணிக்கு 206 ரன்கள் இலக்கு!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.

15-வது ஐபிஎல் திருவிழா தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 3-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாப் டு பிளஸ்சி – அனுஜ் ராவத் களமிறங்கினார்கள்.

தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த டு பிளஸ்சி, போக போக வெறித்தனமாக ஆடத் தொடங்கினார். மறுமுனையில் இருந்த அனுஜ் ராவத் அவருடன் இணைந்து சிறப்பாக அடிவர, 21 ரன்கள் குவித்து அனுஜ் ராவத் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து விராட் கோலி களமிறங்க, டு பிளஸ்சி அரைசதம் அடித்தால். ஒரு முனையில் டு பிளஸ்சி சிக்சர், பவுண்டரி என வெளுக்க, மறுமுனையில் இருந்த கோலியும் அவருக்கு சமமாக ஆடிவந்தார்.

57 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டரிகள் என மொத்தம் 88 ரன்கள் அடித்து டு பிளஸ்சி வெளியேற, அவரைதொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவரும் அதிரடியாக அடிவர, கோலி – தினேஷ் கார்த்திக் கூட்டணியில் அணியின் ஸ்கொர் 200-ஐ கடந்தது. இறுதியாக பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தற்பொழுது பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.

Published by
Surya

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

2 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

3 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

4 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

5 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

6 hours ago