ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர் வெளியேறிய நிலையில், தற்பொழுது அவர் மீண்டும் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம், சென்னை அணியின் பந்துவீச்சில் தான். அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாததால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்திக்க காரணமாய் அமைந்தது.
சென்னை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களான தீபக் சஹார், ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன் காயம் காரணமாக போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. தற்பொழுது தீபக் சஹார், வலைப்பயிற்சியில் ஈடுபடும் நிலையில், அவர் அணிக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.
காயங்களில் இருந்து தீபக் சாஹர் மீண்டுள்ள நிலையில், அவர் பெங்களூர், NCA மைதானத்தில் வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தீபக் சாஹர், விரைவில் பூரணமாக குணமடைந்து சென்னை அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது, மேலும், வரும் 25-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதால், இது சென்னை அணிக்கு பெரிய பலமாய் அமையும்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…