இன்றைய போட்டி முடிந்த பிறகு சென்னை வீரர் தீபக் சாஹர் தனது தோழியிடம் தன் காதலை வெளிப்படுத்தினர்.
இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஃபாஃப் டு ப்ளெஸிஸ் 76 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கே.எல் ராகுல் 42 பந்தில் 8 சிக்ஸர் , 7 பவுண்டரி விளாசி 98* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இந்நிலையில், இப்போட்டி முடிந்த பிறகு சென்னை வீரர் தீபக் சாஹர் தனது தோழியிடம் தன் காதலை வெளிப்படுத்தினர். பின்னர், இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர். இருவரும் மோதிரம் மாற்றி கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தீபக் சாஹருக்கு ரசிகர்கள் ஒருபுறம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் இன்றைய போட்டியில் தீபக் சாஹர் 4 ஓவர் வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். இதனால், இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வி பெற தீபக் சாஹர் காரணம் என கூறி வருகின்றனர். இன்றைய போட்டியில் ஷர்துல் தாக்கூர் 3 ஓவர் மட்டுமே வீசி 3 விக்கெட்டை பறித்து 28 ரன்கள் மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…