கிரிக்கெட்

IPL 2024: சர்ஃபராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டேவை விடுவிக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு.!

Published by
செந்தில்குமார்

IPL 2024: 17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதால், இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவார்கள்.

இந்த பட்டியலை சமர்பிப்பதற்கு நவம்பர் 26ம் தேதி வரை அவகாசம் உள்ளதாகவும், அதற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஐபிஎல் அமைப்புத் தெரிவித்துள்ளது. ஆனால் மினி ஏலத்திற்கு முன் டிரேடிங் முறை மூலம் வீரர்களை விற்றுக்கொள்ளலாம். இதனால் ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களை விற்றும், வாங்கியும் வருகின்றனர்.

2 உலகக்கோப்பைகளை தட்டிசெல்ல காரணமான வெ.இண்டீஸ் வீரருக்கு அதிரடி தடை..!

தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த தேவ்தத் படிக்கலை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக  விளையாடி வந்த நட்சத்திர வீரரான ஆவேஷ் கானை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தங்கள் அணியில் இருந்து சில வீரர்களை விடுவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் சர்பராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டேவை விடுவிக்க தயாராக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சீசனில், அவர் நான்கு ஆட்டங்களில் 13.25 சராசரியுடன் 53 ரன்கள் மட்டுமே எடுத்தார். மனிஷ் பாண்டே 10 ஆட்டங்களில் 17.78 சராசரியில் 160 ரன்கள் எடுத்தார்.

ஏமாற்றமாக இருந்தாலும் பெருமைப்படுகிறோம்.! உலக கோப்பைத் தோல்வி குறித்து சூர்யகுமார்.!

ஐபிஎல்லில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற மனிஷ் பாண்டே, தனது ஐபிஎல் வாழ்க்கையில் 170 போட்டிகளில் விளையாடி 3,808 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மனிஷ் பாண்டேவை வர்த்தகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

27 minutes ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

29 minutes ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

1 hour ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

3 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

3 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

3 hours ago