டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் 7 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச தேர்வு செய்தார்.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து நிதானமாக விளையாடி வந்த பிருத்வி ஷா அரைசதம் விளாசினார். இதையடுத்து, தவான் 35 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் அடுத்த சில நிமிடங்களில் பிருத்வி ஷா 64 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்னுடன் வெளியேற அதிரடியாக விளையாடி வந்த ரிஷாப் பண்ட் 37 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டை பறித்தார். 176 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…