டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குயின்டன் டி கோக் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே இருந்து மும்பை விக்கெட்டை பறிகொடுத்து வந்தனர். இதனால், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டும் அடித்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 44 ரன்கள் எடுத்தார்.
டெல்லி அணியில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டையும், அவேஷ் கான் 2 விக்கெட்டையும் பறித்தனர். 138 ரன்கள் இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறக்க வந்த வேகத்தில் பிருத்வி ஷா 7 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் , ஷிகர் தவான் உடன் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி வந்த ஸ்டீவன் ஸ்மித் 33, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவான் 45 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இறுதியாக டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவியுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…