இன்றைய 16-வது போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இப்போட்டி, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய ஷிகர் தவான் 26 ரன்னில் வெளியேறினர். பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க பிருத்வி ஷா , ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா அரைசதம் விளாசி 66 ரன்கள் குவித்தார்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 88 * ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றனர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 228 ரன்கள் குவித்தனர்.
229 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே சுனில் நரைன் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், நிதீஷ் ராணா களமிறங்க நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 28 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய ரஸ்ஸல் 13 ,
தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் சென்றனர். மத்தியில் களம் கண்ட மோர்கன் 44 , ராகுல் திரிபாதி 36 ரன்கள் குவித்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 210 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதலிடத்தில் உள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…