இன்றைய 16-வது போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இப்போட்டி, ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய ஷிகர் தவான் 26 ரன்னில் வெளியேறினர். பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க பிருத்வி ஷா , ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா அரைசதம் விளாசி 66 ரன்கள் குவித்தார்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 88 * ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றனர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 228 ரன்கள் குவித்தனர்.
229 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே சுனில் நரைன் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், நிதீஷ் ராணா களமிறங்க நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 28 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய ரஸ்ஸல் 13 ,
தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் சென்றனர். மத்தியில் களம் கண்ட மோர்கன் 44 , ராகுல் திரிபாதி 36 ரன்கள் குவித்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 210 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதலிடத்தில் உள்ளது.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…