IPL2024: டெல்லி அபார வெற்றி… பிளே ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி , லக்னோ..!

Published by
murugan

IPL2024: லக்னோ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை  இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணியும் டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டைகளை இழந்து 208 ரன்கள் எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 58 ரன்களும்,  டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களும், ஷாய் ஹோப் 38 ரன்களும், ரிஷப் பந்த் 33 ரன்களும் எடுத்தனர். 209 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இன்றைய போட்டியில் தொடக்கமே லக்னோ அணிக்கு சிறப்பாக அமையவில்லை.

காரணம் முதல் ஓவரின் 5-வது பந்தில் கேப்டன் கே.எல் ராகுல் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அடுத்து மார்கஸ் ஸ்டோனிஸ் களமிறங்க மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டி காக் 3-வது ஓவரில் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.இதைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்க 4-வது ஓவரின்  முதல் பந்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்த ஓவரிலே  தீபக் ஹூடா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் லக்னோ அணி 5 ஓவரில் 44 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த ஆயுஷ் படோனி  நிலைத்து நிற்பார் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 6 ரன்களை எடுத்து நடையை கட்டினார். இருப்பினும் லக்னோ அணியில் மத்தியில் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 27 பந்தில் 4 சிக்ஸர், 6 பவுண்டர் என மொத்தம் 61 ரன்கள் குவித்தார்.

அடுத்து இறங்கிய அர்ஷத் கான் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி 58* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக லக்னோ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை  இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டையும், அக்சர் படேல், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கலீல் அகமது தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

டெல்லி அணி இதுவரை 14 போட்டிகளில் விளையாடி தலா 7 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அதே நேரத்தில் லக்னோ அணி 13 போட்டிகள் விளையாடி 6 போட்டியில் வெற்றியும், 7 போட்டியில் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகளுடன் உள்ளது. லக்னோ அணிக்கு மீதம் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. லக்னோ அணி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் வெறும் இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற முடியும்.

ஏற்கனவே 14 புள்ளிகளுடன் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர். இதனால் லக்னோ பிளே ஆப்  செல்வதில் சற்று சிரமம் இதனால் தற்போது இரு அணிகளுமே பிளே ஆப் செல்லும் தகுதியை இழந்துள்ளனர். 

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

15 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

16 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

17 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

18 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

19 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

20 hours ago