பல மாற்றங்கள் செய்த போதிலும் முடிவு என்னவோ மாறவில்லை என்று சென்னை அணி கேப்டன் தோல்வி குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல்2020 தொடரின் 37வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.இந்த ஆட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க சென்னை – ராஜஸ்தான் அணிகள் பலபரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் 7விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தது. சென்னை அணி தோல்வி அடைந்ததால், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாயுப்பை இழந்துள்ளது.
ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவிய பிறகு கேப்டன் டோனி தோல்வி கூறியதாவது:-
முதல் இன்னிங்ஸை போல இரண்டாவது இன்னிங்ஸ்-லிலும் சுழற்பந்துக்கு சாதகமாக அமையவில்லை. மேலும் வேகப்பந்து வீச்சிற்கே கை கொடுத்தது.
கடந்த 5 போட்டிகளில் நாங்கள் எடுத்த அனைத்து முயற்சியுமே தோல்வியிலேயே முடிந்துள்ளது. அணியில் பல மாற்றங்கள் செய்த போதும் முடிவு மட்டும் மாறவே இல்லை.
லட்சக்கணக்கான ரசிகர்கள் விளையாட்டை பார்த்து கொண்டிருக்கின்றனர், இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.இத்தொடரில் இளம் வீரர்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது உண்மை.
மேலும் சென்னை அணியில் உள்ள இளம் வீரர்களிடம் பெரிய உத்வேகம் எதையும் பார்க்கவில்லை.
அடுத்தடுத்த போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இளம் வீரர்களும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாட ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் என்று கூறினார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…