நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மார்ட்டின் குப்டில்ஒரு ரன்னில் வெளியேறினர்.
இந்நிலையில் நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட்டை இழந்து விளையாடி கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.பின்னர் மழை தொடர்ந்ததால் போட்டியை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி விளையாடியதன் மூலம் புதிய உலக சாதனைகளை படைத்து உள்ளார். தோனிக்கு இது 350 ஒருநாள் போட்டி ஆகும். 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 10 -வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் இந்திய அணியில் சச்சினுக்கு பிறகு 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய அணி வீரர் என்ற சாதனையும் படைத்தது உள்ளார்.மேலும் 350 ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக விளையாடிய முதல் வீரர் என்ற உலகசாதனையை படைத்து உள்ளார்.
இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா 360 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருந்தார்.ஆனால் அவர் 44 போட்டிகளில் கீப்பராக இல்லை .தோனி 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அதில் 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து உள்ளார்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…