#BREAKING: கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்திக் விலகல்!

Published by
Venu

கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்திக் விலகுவதாக அறிவித்துள்ளார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கவுதம் கம்பீர் தலைமையில் 2012 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.பின்பு கொல்கத்தா அணியில் இருந்து கம்பீர் விடுவிக்கப்பட்ட பின்னர் அந்த அணிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்து வருகிறார்.இவரது தலைமையில் கொல்கத்தா அணி  கடந்த 2018 -ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.கடந்த ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேறியது கொல்கத்தா அணி. இந்த ஆண்டு கொல்கத்தா அணி 7 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் , 4 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

 இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்திக் விலகுவதாக அறிவித்துள்ளர். இது தொடர்பாக அணி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   தனது பேட்டிங்கில் கூடுதல்  கவனம் செலுத்துவதற்காக ,அணியின் கேப்டன் பதவியை இயன் மோர்கனிடம் ஒப்படைக்க விரும்புவதாக தினேஷ் கார்த்திக்  தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், “தினேஷை போன்ற ஒருவர் இது போன்ற ஒரு முடிவை எடுக்க நிறைய தைரியம் தேவை. அவரது முடிவால் நாங்கள் ஆச்சரியப்பட்டாலும், அவருடைய விருப்பங்களை நாங்கள் மதிக்கிறோம். 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற கேப்டனான  இயன் மோர்கன், அணியை வழிநடத்த தயாராக இருப்பதும் எங்களுக்கு அதிர்ஷ்டம் தான் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 hour ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago