பெங்களூர் ரசிகர்களால் தான் உலகக்கோப்பையில் இடம்பிடித்தேன்! தினேஷ் கார்த்திக் எமோஷனல்!

Published by
பால முருகன்

தினேஷ் கார்த்திக் : 2022 உலகக்கோப்பையில் பெங்களூர் ரசிகர்களால் தான் இந்திய அணியில் இடம் பெற்றேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்  வீரர் தினேஷ் கார்த்திக் ஏற்கனவே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தினேஷ் கார்த்திக் நடப்பாண்டில் (2024)  ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், பெங்களூர் அணியில் இருந்து விடைபெற்றது குறித்து தினேஷ் கார்த்திக் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்தார். அந்த வகையில், சமீபத்தில் பெங்களூரு அணி க்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோவில் பேசிய தினேஷ் கார்த்திக், 2022 உலகக்கோப்பையில் பெங்களூர் அணியால் தான் இந்திய அணியில் இடம் பெற்றேன் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “பெங்களூர் அணிக்காக நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது தான் எனக்கு ரசிகர்கள் அதிகமானதாக நான் நினைக்கிறேன். எங்களுடைய அணியில் விராட் கோலி மிக மிக பெரிய பெயர் மற்றும் அவர் ஆர்சிபியின் பெரும் பகுதி. ஆனால், ரசிகர்கள் அதை விட பெரியது.  நான் இந்த அணிக்காக விளையாடிய காரணத்தால் பெற்ற அன்பின் அளவு வார்த்தைகளால் என்னால் சொல்லவே முடியாது.

பெங்களூர் ரசிகர்களால் தான் 2022 உலகக் கோப்பைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று சில சமயங்களில் நினைப்பேன். டிகே போட்டியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்’ என்று மக்கள் எனக்கு ஆதரவு கொடுத்ததை எப்போதுமே என்னால் மறக்கவே முடியாது. 37 வயதில் நான் நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தபோது, ​​நான் எனது நாட்டிற்காக விளையாடிய சிறிய கட்டத்தில் பெங்களூர் அணியும்  ரசிகர்களும் மிக முக்கியமான பங்கை வகித்ததாக உணர்கிறேன்” எனவும் எமோஷனலாக பேசியுள்ளார்.

மேலும், ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக்கை 5.5 கோடிக்கு வாங்கியதிலிருந்து, தினேஷ் கார்த்திக் அணியின் ஒரு முக்கிய நபராக மாறினார் என்றே சொல்லலாம். ஆர்சிபியின் ரசிகர் பட்டாளம் பெரும்பாலும் தினேஷ் கார்த்தியின் ஆட்டத்தை பார்த்து அவருக்காகவே மைதானத்திற்கு வந்து போட்டியை காண்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“இங்கிலாந்தை வீழ்த்த எங்க கேப்டன் கில் ரெடியா இருக்காரு” குல்தீப் யாதவ் பேச்சு!

லீட்ஸ் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், அடுத்ததாக யார் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின்…

1 hour ago

திக் திக்கை ஏற்படுத்தும் காந்தாரா! விபத்தில் உயிர் பிழைத்த நடிகர் ரிஷப் ஷெட்டி!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.…

2 hours ago

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு!

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியத் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில்…

3 hours ago

அகமதாபாத் விமான விபத்து – இன்று கூடுகிறது உயர்மட்டக்குழு!

அகமதாபாத் :  விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்து இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜூன் 12 அன்று,…

3 hours ago

ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டம்? டிரம்ப் தடுத்து நிறுத்தினாரா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச…

4 hours ago

இஸ்ரேல் – ஈரான் மோதல்…இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்?

டெல்லி : இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி…

4 hours ago