Dk,Virat Kohli [file image]
சென்னை : பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தற்போது ஓய்வு ஐபிஎல் தொடரிலிருருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடர் 2024 தொடங்குவதற்கு முன்னதாகவே ஆர்சிபி அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் இதுதான் தனது கடைசி ஐபிஎல் தொடர் அறிவித்திருந்தார். தற்போது அவர் தெரிவித்தது போல நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்த்துள்ளார்.
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் ஆரசிபி அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் ஒரு சிறப்பான தொடராகவே அமைந்தது முதல் 8 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி 1 வெற்றிகளை மட்டுமே பெற்றது. அதனை அடுத்து தொடர்ந்து 6 வெற்றிகளை குவித்து பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதற்கு தனது பங்கை தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆற்றியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி முடிவடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் தனது விக்கெட் கீப்பிங் கையுறையை (கிளவுஸை) தூக்கி காண்பித்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவரது ஓய்வுக்கு சக ஆர்சிபி வீரர்கள் தங்களது பிரியாவிடையை அளித்தனர். களத்தில் இருந்த விராட் கோலி அவரை கட்டி அனைத்து தனது பிரியவிடையை தினேஷ் கார்த்திக்கு அளித்தார். தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் 15 போட்டிகளில் விளையாடி 326 ரன்களை குவித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் அவர் 257 போட்டிகளில் விளையாடி 4842 ரன்களை குவித்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் 6 அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். அதில் 2013-ம் ஆண்டு மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் போது அந்த அணியில் பங்காற்றி இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் அவருக்கு ஒரு நல்ல ஃபேர்வெல் அமையவில்லை என கவலையில் இருந்து வருகின்றனர்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…