இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சில தனிப்பட்ட காரணங்களால் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை.
இதனை தொடர்ந்து, முழங்கையில் சிறிய அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக, மும்பை வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பெல்ஜியம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், முழங்கையில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதில் ஆர்ச்சர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாகவும் வதந்தி தகவல் பரவியது.
இந்த வதந்தி தகவலுக்கு தற்போது ஆர்ச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது ” ஒரு வீரர் கடினமான நேரத்தில் இருக்கும்போது, உங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக எதையும் வெளியிடாதீர்கள். தன்னிடம் இருந்து எதையும் உறுதி செய்யாமல் இப்படி
செய்திகள் வெளியிடுவது, மிகவும் முட்டாள்தனமானது” என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்துள்ள நிலையில். வரும் 30ம் ராஜஸ்தான் அணியுடன் மும்பை அணி மோதுகிறது. இந்த போட்டியில் ஆர்ச்சர் கலந்துகொண்டு விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…