விஷயம் தெரியாமல் வதந்தி பரப்பாதீங்க…பயங்கர கோபத்தில் விளக்கம் கொடுத்த ஆர்ச்சர்.!!

Published by
பால முருகன்

இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சில தனிப்பட்ட  காரணங்களால் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை.

இதனை தொடர்ந்து, முழங்கையில் சிறிய அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக, மும்பை வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பெல்ஜியம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும்,  முழங்கையில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதில் ஆர்ச்சர்  இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாகவும் வதந்தி தகவல் பரவியது.

இந்த வதந்தி தகவலுக்கு தற்போது ஆர்ச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது ” ஒரு வீரர் கடினமான நேரத்தில் இருக்கும்போது, உங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக எதையும் வெளியிடாதீர்கள். தன்னிடம் இருந்து எதையும் உறுதி செய்யாமல் இப்படி
செய்திகள் வெளியிடுவது, மிகவும் முட்டாள்தனமானது” என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும், நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்துள்ள நிலையில். வரும் 30ம்  ராஜஸ்தான் அணியுடன் மும்பை அணி மோதுகிறது. இந்த போட்டியில் ஆர்ச்சர்  கலந்துகொண்டு விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

7 minutes ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

48 minutes ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

1 hour ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

2 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

3 hours ago

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : “இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்”..டிஜிபி அறிவிப்பு!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…

3 hours ago