ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம் லெவன்’ விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்றுள்ளார்
கேரள மாநிலம் கண்ணூர் பானூர் மீத்தேல் பரம்பு பகுதியை சேர்ந்தவரான கே.எம்.ராஸிக் ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம் லெவன்’ விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்று அசத்தியுள்ளார்.
IPLலில் தினமும் போட்டிப்போடும் 2 அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வீரர்களின் மெய்நிகர் குழுவை தேர்ந்தெடுத்து ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டு வருகிறது. இதில், நிஜ அணியின் வீரர்கள் அடித்த ரன்கள், விக்கெட்டுகள் மற்றும் பவுண்டரிகளின் அடிப்படையிலேயே இந்த ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் போட்டியில் விளையாடுபவருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டும் வருகிகின்றது.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை கொல்கத்தா அணியும்,சென்னை அணியும் விளையாடியது.இப்போட்டியை ராஸிக் ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டியில் வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாடினார். இதில் ராஸிக்கின் ‘ட்ரீம் லெவன்’ அணி 790.5 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.
இதே போல் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் ‘ட்ரீம் லெவல்’ ஆன்-லைனில் போட்டியிட்ட 55 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களைத் தாண்டி, ராஸிக் இச்சாதனை படைத்து வெற்றியை தன்வசப்படுத்தினார்.வென்ற ராஸித் கண்ணூரில் ஏகேஜி மருத்துவமனையில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிப்பெற்ற தொகையில் ₹30 லட்சம் வரி போக, மீதம் ₹70 லட்சம் தொகை அவருக்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…
பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…