ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!
வரும் ஜுன் 15-ல் நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்டுவதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில் தேர்வை நடத்துவதாக முதலில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரே கட்டமாக ஆன்லைனில் தேர்வுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தேவை என்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவிற்குப் பிறகு, தேர்வில் பங்கேற்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொருத்தமான மற்றும் பாதுகாப்பான தேர்வு மையங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் NBEMS தெரிவித்துள்ளது. மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்களுகளின் வசதி மற்றும் நியாயத்தை உறுதி செய்வதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உச்ச நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாணவர்கள் எந்த வதந்திகளுக்கும் நம்ப வேண்டாம் என்றும், தேர்வு தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படும், அதனை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.