ரசிகர்களே ரெடியா இருங்க ..! 6 மணி முதல் பிளே-ஆஃப்க்கான டிக்கெட் விற்பனை !!

Published by
அகில் R

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான பிளே-ஆஃப்க்கான டிக்கெட்டானது இன்று மாலை 6 மணி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஐபிஎல் தொடரின் 17-வது சீசனானது தற்போது முடிவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது. மேலும் அடுத்த வாரம் பிளே ஆஃப் சுற்றும் தொடங்கிவிடும். இந்த பிளே ஆஃப் சுற்றின் நடக்கவிருக்கும் 4 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையின் தேதியை தற்போது ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 14 மற்றும் மே 15 தேதிகளில் மாலை 6 மணிக்கு பிளே-ஆஃப் சுற்றின் குவாலிபயர் 1, 2 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்கப்படும் என அறிவித்துள்ளனர்.

அதாவது மே 14 தேதி, இன்றைய நாளில் மாலை 6 மணி முதல் ரூபே (Ru-Pay) கார்டு வைத்திருப்பவர்கள், தகுதிச் சுற்று 1, தகுதிச் சுற்று 2 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் நாளை (மே 15) மாலை 6 மணிக்கு வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல மே 26-ம் தேதி நடக்கவிருக்கும் இறுதி சுற்றுக்கான டிக்கெட்டுகளை ரூபே கார்டு வைத்திருப்பவர்கள் வருகிற மே 20-ம் தேதி அன்று மாலை 6 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும், மற்றவர்கள் அதற்கு அடுத்த நாளான மே21-ம் தேதி அன்று மாலை 6 மணி முதல் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த பிளே ஆப் சுற்றுக்கான 4 போட்டிகளின் டிக்கெட்டுகளும் அறிவிக்கப்பட்ட அன்றைய தேதிகளின் மாலை 6 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வ ஆப்பான பேடிஎம் ஆப் (Paytm App), பேடிஎம் இன்சைடர் (Paytm Insider) மற்றும் www.insider.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் அஹமதாபாத்திலும், குவாலிபயர் 2 மற்றும் இறுதி போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

12 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

13 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

14 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago