எனக்கு FAREWELL.. அடுத்த போட்டியில் கொல்கத்தா ஜெர்சி – எம்எஸ் தோனி உருக்கம்

Published by
பாலா கலியமூர்த்தி

கொல்கத்தாவில் நான் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன் என அபார வெற்றிக்கு பின் எம்எஸ் தோனி உருக்கம்.

16-வது ஐபிஎல் தொடரின் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி வீர்ரகள் அதிரடியாக விளையாடி இமாலய இலக்கை நிர்ணயம் செய்தனர். அதாவது, 4 விக்கெட் இழப்புக்கு  235 ரன்கள் எடுத்தனர்.

சென்னை முதலிடம்:

பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்க நேரிட்டனர். இருப்பினும், ஜேசன் ராய் மற்றும் ரிங்கு சிங் அதிரடியா ஆட்டத்தால் சற்று ரன் மழை பொழிந்தது. இருப்பினும் , இறுதியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 10 புள்ளிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை.

மஞ்சள் நிறம்:

இதனிடையே, கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டி சென்னையில் நடைபெற்றது போல் மைதானம் முழுவதும் மஞ்சள் நிறம் சூழ்ந்தது, பலரும் ஆசிரியத்தில் இருந்தனர். தோனி படை எங்கு சென்றாலும், அங்கு மஞ்சள் நிறம் நிறைந்திருக்கும், அந்த அளவுக்கு சென்னை ரசிகர்கள் நாடு முழுவதும் ஏரளாமானோர் உள்ளனர். அந்த வகையில் தோனியை பார்க்க நேற்று நடைபெற்று போட்டியில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

தோனி உருக்கம்:

கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, கொல்கத்தாவில் நான் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இங்கிருந்து நான் பணி செய்த கரக்பூர் ரயில் நிலையத்திற்கு 2 மணி நேரத்தில் போக முடியும். அந்த பந்தம் தற்போது நீள்கிறது. எனக்கு FAREWELL அளிப்பதற்காக ரசிகர்கள் இப்படி மஞ்சள் ஜெர்சியில் வந்திருக்கிறார்கள் என நினைக்கிறன். ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி.

குழு விளையாட்டு:

இதில் பலரும் அடுத்த போட்டியில் கொல்கத்தா ஜெர்சி அணிந்து அவர்களுக்கு தான் ஆதரவு அளிக்கப்போகிறார்கள், என ஈடன் கார்டன் மைதானம் முழுவதும் மஞ்சள் ஜெர்சியால் நிறைந்து காணப்பட்டது குறித்த கேள்விக்கு தோனி பதிலளித்தார். மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பெறும் வெற்றியின் காரணமாக, அணிக்குள் நம்பிக்கை கிடைத்துள்ளது. குறிப்பிட்ட ஒரு வீரர் நன்றாக விளையாடுவதை விட அணியாக சிறப்பாக விளையாடுவதே முக்கியம் எனவும் குறிப்பிட்டார்.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

9 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

10 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

10 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

11 hours ago