டிஎன்பிஎல் தொடரின் அதிவேக அரைசதம்..! சாய் கிஷோர் அசத்தல் சாதனை..!

Published by
செந்தில்குமார்

திருப்பூர் அணி வீரர் சாய் கிஷோர், டிஎன்பிஎல் தொடரின் அதிவேக அரைசதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெறுகிற நிலையில், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திருச்சி அணிகள் மோதிய 17வது போட்டியில், திருப்பூர் அணியின் வீரர் சாய் கிஷோர், 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்து, டிஎன்பிஎல் தொடரின் அதிவேக அரைசதத்தை அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய திருப்பூர் அணியின் வீரர்கள் அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் குவித்தனர். இதில் சாய் கிஷோர் மற்றும் பால்சந்தர் அனிருத் அரைசதம் அடித்து அசத்தினர்.

அதன்பின், 202 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி வீரர்கள் இறுதிவரை போராடியும் வெற்றி இலக்கை எட்ட முடியாமல், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் அதிகபட்சமாக பெராரியோ 42 ரன்களும், ஜாபர் ஜமால் 30 ரன்களும், ஆண்டனி தாஸ் 25 ரன்களும் குவித்துள்ளனர். திருப்பூர் தமிழன்ஸ் அணியில் புவனேஸ்வரன் தனது அட்டகாசமான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

15 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

15 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

16 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

16 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

19 hours ago