என்னா அடி! கடவுளுக்கு நன்றி ஹைதராபாத் கூட விளையாடல…மிரண்ட வாசிம் அக்ரம் !

Published by
பால முருகன்

Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  அதிரடியான பார்மில் விளையாடி வருகிறது. இதுவரை 7 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் ஹைதராபாத் அணி இந்த சீசனில் பெரிய அளவில் சாதனைகளை படைத்தது கொண்டு வருகிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கடைசியாக பெங்களூர் அணிக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் கூட முதலில் பேட்டிங் செய்த போது 287 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்தது இருந்தது. எனவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  பார்ம் பற்றி ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் சமீபத்திய பேட்டி ஒன்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பார்ம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கை இந்த சீசனில் பார்க்கும் போது ரொம்பவே பயமாக இருக்கிறது. நான் இந்த நேரத்தில் கடவுளுக்கு தான் நன்றி சொல்வேன்.

என்ன காரணத்துக்காக நன்றி சொல்வேன் எதற்காக என்றால் இந்த காலத்தில் என்னை கிரிக்கெட் விளையாடாமல் ஆக்கியதற்கு தான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 270, 280 ரன்கள் அசால்டாக அடிக்கிறார்கள். ஒரு போட்டியில் இப்படியான ரன்கள் அடித்தால் பரவாயில்லை ஆனால், அவர்கள் பல போட்டிகளில் இப்படி அடிக்கிறார்கள்.

5 ஓவரில் 100 ரன்கள் அடிக்கிறார்கள். இப்படியெல்லாம் ரன்கள் அடிப்பது சட்டவிரோதம். இது எப்படி நடக்கும்? பந்துகளை ஃபுல்-டாஸ் வீசினாலும் கூட இப்படி ரன்களை குவிக்க செய்வது ரொம்பவே கடினமான விஷயம்.ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் எல்லாம் அந்த அணியில் இருப்பதால் அணி நல்ல வலிமையாக மாறியுள்ளது. வரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் எனவும் நான் நம்புகிறேன் என்றும்” வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். மேலும், நாளை ஹைதராபாத் அணி பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

7 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

8 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

8 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

9 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

9 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

10 hours ago