லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லில் வரும் சீசனில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பத்து அணிகள் விளையாட உள்ளது. புதியதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய அணியான லக்னோ அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் லக்னோ அணி ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி ஃப்ளவரை பயிற்சியாளராக நியமித்தது. இத்தகைய சூழ்நிலையில், இப்போது லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 7 ஆயிரம் கோடிக்கு கோயங்கா குழுமத்தால் வாங்கப்பட்ட அணியாக லக்னோ அணி உள்ளது.
கவுதம் கம்பீர் முன்பு ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில் கொல்கத்தா இரண்டு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. லக்னோ அணியின் ஆலோசகரான பிறகு, கவுதம் கம்பீர் சார்பில், இந்த பொறுப்பை எனக்கு வழங்கிய கோயங்கா மற்றும் ஆர்பிஎஸ்ஜி குழுமத்திற்கு நன்றி என்று தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
கம்பீர் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லிக்காக மொத்தம் 154 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 4218 ரன்கள் அடித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…