சென்னை

6 மாநிலங்களில் உள்ள 100 குழந்தைகளுக்கு உதவிய கிரிக்கெட் கடவுள்

Published by
Castro Murugan

இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் சச்சின் டெண்டுல்கர்,இவர் ஆறு மாநிலங்களில் உள்ள மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 100 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு  சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி செய்துள்ளார்.

சச்சின் கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் தனது பொதுவாழ்க்கையிலும் பல குறிப்பிடக்கூடிய சிறப்பான செயல்களை செய்து வருகிறார்.சச்சின் ஏகம் என்ற அறக்கட்டளையில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.இதன் மூலம் அரசு மற்றும் அறக்கட்டளை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குறிப்பிட்ட  மருத்துவ செலவுகளை செய்ய முடியாதவர்களுக்கு ,டெண்டுல்கரின் அறக்கட்டளை உதவி வருகிறது.இதன் மூலம் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள 100 குழந்தைகளுக்கு உதவி கிடைத்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், சச்சின் அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மகுண்டா மருத்துவமனைக்கு குழந்தைகளுக்கான சிகிச்சைக்கு தேவைப்படக்கூடிய உபகரணங்களை கொடுத்து உதவியுள்ளார். இது ஒவ்வொரு ஆண்டும் 2000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக குழந்தைகள் தினத்தன்று யுனிசெஃப் உடனான இணைய கருத்தரங்கில் சச்சின் பங்கேற்றார், வருங்கால உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் குழந்தைகளை முக்கிய பங்கு இருக்கும் என ஊக்குவித்தார்.

 

Published by
Castro Murugan

Recent Posts

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

19 minutes ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

1 hour ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

2 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

3 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

3 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

4 hours ago