ரஷித் கானை எதிர்கொள்ள ஹர்திக் பாண்டியா விரும்பவில்லை – இர்பான் பதான்!!

Published by
பால முருகன்

HardikPandya :  குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஷித் கானை ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள விரும்பவில்லை என இர்பான் பதான்  தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  முதலில் பேட்டிங் செய்த  குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து.  அதனை தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் நன்றாக விளையாடி வந்தது.

பலரும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றிபெறும் என நினைத்து கொண்டு இருந்த சமயத்தில் 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இந்த போட்டி பாதிக்கப்பட்ட காரணம் ஹர்திக் பாண்டியா தான் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய இர்பான் பதான் ” மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியின் இலக்கை அவர்கள் துரத்தும்போது தொடர்ச்சியாக விக்கெட் விடாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைப்போல, டிம் டேவிட்டை தவறான இடத்தில் இறக்கிவிட்டார்கள். ரஷித் கானுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தபோது விக்கெட் விழுந்தவுடன் ஹர்திக் பாண்டியா வருவார் என எதிர்பார்த்தோம்.

ஆனால், அவர் வராமல் டிம் டேவிட் வந்தார். ஒருவேளை நீண்ட மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஹர்திக் பாண்டியா ரஷித் கானை எதிர்கொள்ள விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு அனுபவம் வாய்ந்த இந்திய வீரர் ஒருவர் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து வெளிநாட்டு வீரரை ரஷித்துக்கு எதிராக விளையாட அனுப்பி வைத்தது பார்க்கவே தவறாக இருக்கிறது. இதனை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். என்னை பொறுத்தவரை தவறு. அவர் தாமதமாக களமிறக்கியது  சற்று போட்டியை பாதித்தது” எனவும் இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.

Recent Posts

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

33 minutes ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

2 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

2 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

3 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

3 hours ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

3 hours ago