ஹர்திக் பாண்டியாவின் பெயரை தூக்கிய மனைவி! ஒரு வேளை இருக்குமோ?

Published by
பால முருகன்

ஹர்திக் பாண்டியா : கருத்துவேறுபாடு காரணமாக ஹர்திக் பாண்டியாவும் அவருடைய மனைவியும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், அவருடைய மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக பரவும் செய்தி தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இப்படியான ஒரு செய்தி பரவுவதற்கான முக்கிய காரணமே நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது கணவரின் பெயரை நீக்கியது தான்.

அது மட்டுமின்றி, மும்பை கேப்டனாக பொறுப்பேற்று ஹர்திக் பாண்டியா விளையாடிய நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் கூட நடாஷா ஸ்டான்கோவிக் பார்ப்பதற்கு வருகை தரவில்லை. அதுவே ஒரு விமர்சனமாக இருந்த நிலையில், திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவின் பெயரை நீக்கியுள்ளது விவாகரத்து வதந்தியை தூண்டியுள்ளது.

ஹர்திக் பாண்டியாவும், அவருடைய மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி கொண்டு இருக்கிறது. இந்த தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தி தகவலா? என்பதனை பற்றி இவர்கள் இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டும் தான் தெரியவரும். விரைவில் இதற்கு விளக்கம் அளிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும். ஹர்திக் பாண்டியா செர்பிய நடனக் கலைஞரும், மாடல் அழகியுமான  நடாஷா ஸ்டான்கோவிக்கை காதலித்து கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அதே ஆண்டு ஜூலை மாதம், ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு அகஸ்திய பாண்டியன் என்று பெயரும் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago