தொடர் நாயகன் விருதை நடராஜனிடம் கொடுத்த ஹர்திக் பாண்டியா..!

Published by
murugan

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இன்று கடைசி போட்டி நடைபெற்றது. இன்றைய போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இரண்டாவது டி 20 போட்டியின் போது ஹர்திக் பாண்டியா 22 பந்தில் 42 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணிக்கு 195 இலக்கு வைக்கப்பட்டது, அதில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா  ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் பந்தை அடித்து நொறுக்கினார்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸின் வீசினார். 6 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டதை அடுத்து ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 2 ரன்கள் எடுத்து 2 வது போட்டியில் வெற்றிபெறச் செய்து இந்தியா தொடரை கைப்பற்ற உதவினார். இந்நிலையில், இன்று 3-வது போட்டி முடிந்தபிறகு ஹர்திக் பாண்டியாவிற்கு மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வழங்கப்பட்டது.

பின்னர், பேசிய ஹர்திக் பாண்டியா நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், தொடர் நாயகன் விருதைப் பெறுவதில் கவலையில்லை, ஆனால் அது ஒரு குழு முயற்சி. 2 வது ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு இது ஒரு 4 போட்டிகள் கொண்ட தொடராக நாங்கள் என்று நினைத்தோம், நாங்கள் பெற முடிந்தது மூன்று வெற்றிகள், அதில் மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கப்பட்ட மேன் ஆஃப் தி சீரிஸ் விருதை  தமிழக வீரர் நடராஜனுக்கு வழங்கினார். நடராஜன், நீங்கள் இந்த தொடரில் சிறந்து விளையாடினீர்கள். அறிமுகமான கடினமான சூழ்நிலைகளில் அற்புதமாக செயல்பட உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பின் அளவைப் பேசுகிறது. நீங்கள் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் சகோதரா என ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

10 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

4 hours ago