ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரக்கூடிய விராட் கோலி அவர்கள் தொடர்ச்சியாக குறைவான ரன்களை மட்டுமே எடுத்து வருகிறார். அண்மையில் இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மட்டும் அதிக அளவில் ரன்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில் விராட் கோலி தொடர்ந்து குறைந்த அளவிலான ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வருவதால் அவர் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் உள்ளிட்ட பலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக டெல்லி அணி வீரர் டேவிட் வார்னரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விராட் கோலி மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த டேவிட் வார்னர் விராட் கோலிக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். பார்ம் என்பது தற்காலிகமானது தான். கிளாஸ் தான் நிரந்தரமானது. எனவே நீங்கள் அதனை தவற விடாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு தற்போது நடக்கும் அனைத்துமே எல்லா வீரர்களுக்கும் நடக்கக்கூடிய ஒன்று தான்.
எனவே நீங்கள் இன்னும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கையையும் கிரிக்கெட்டையும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…
சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…
குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…