முக்கியச் செய்திகள்

ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித்..!

Published by
murugan

ஒருநாள் போட்டிகளில் 300 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார்.

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர்களாக அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர். நிதானமான விளையாடிய  அப்துல்லா ஷபீக் 20 ரன்களில் வெளியேற அவரை தொடர்ந்து  இமாம்-உல்-ஹக் 36 ரன்கள் இருக்கும்போது ஹர்திக் பாண்டியா ஓவரில் கேட்ச் அவுட் ஆனார்.

பின், கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி  சேர்ந்து சிறப்பாக விளையாடினார்கள். பாபர் அசாம் 50 ரன்களும்,  முகமது ரிஸ்வானும் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இருவரும்  போல்ட் ஆனார்கள். பின்னர் களமிங்கிய அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.  இறுதியாக பாகிஸ்தான் 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  191 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் 191 ரன்கள்  இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய  சுப்மன் கில் 16 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கோலியும் 16 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இப்போட்டியில் ரோஹித் 36 பந்தில் அரைசதம் விளாசினார். இப்போட்டியில் ரோஹித் சர்மா இதுவரை 6 சிக்ஸர் விளாசி உள்ளார். 9-வது ஓவரை ஹரிஸ் ரவூப் வீசினார். அந்த ஓவரில் 2-வது மற்றும் 5 -வது பந்தில் ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்தார். இதனால் அந்த ஓவரில் 14 ரன்களை இந்தியா சேர்த்தது. இதில் 5-வது பந்தில் தனது 4-வது சிக்ஸர் அடித்தபோது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா புதிய சாதனையை படைத்தார். ஒருநாள் போட்டிகளில் 300 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார்.

தற்போது களத்தில் ரோஹித் சர்மா  80* ரன்ககளும்,  ஷ்ரேயாஸ் ஐயர் 35* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago