மூச்சு திணற அடித்த ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் ..!! மும்பை அணிக்கு 278 ரன்கள் இலக்கு ..!!

Published by
அகில் R

SRHvsMI : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியாக இன்று ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் ராஜிவ் காந்தி மைதானத்தில் விளையாடிவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் மும்பை பவுலர்களின் பந்து வீச்சை மரண காட்டு காட்டினார். அவரது அதிரடியில் மும்பை பவுலர்கள் எப்படி பந்து வீசலாம் என்று திணறினார்கள்.அதிரடி காட்டிய அவர் வெறும் 18 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

அதன் பிறகு டிராவிஸ் ஹெட் வெறும் 22 பந்துகளில்  3 சிக்ஸர், 9 ஃபோர்களுடன் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அவர் எங்கு விட்டு சென்றாரோ அதிலுருந்து தொடங்கினார். மும்பை அணி பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் அதை நான்கு பக்கமும் சிதறடித்தார். அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தால் ஹைதராபாத் அணி 10 ஓவரில் 150 ரன்களை கடந்தது.

இதன் மூலம் வெறும் 16 பந்துகளில் தனது அரை சதத்தை கடந்த அபிஷேக் துரதிஷ்டவசமாக 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர், 3 ஃபோர்கள், 7 சிக்ஸர்களுடன் வெறும் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின் களத்தில் இருந்த கிளாசெனும்,  மார்க்ரமும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தனர். ஹைதரபாத் அதிரடியில் அந்த அணி 14.4 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது.

அதனை தொடர்ந்து விளையாடிய இவர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை காட்ட தொடங்கினார்கள். ஹைதராபாத் அணியில் களமிறங்கிய மயங்க் அகர்வாலை தவிர அனைத்து வீரர்களும் மும்பை பவுலர்களை துவம்சம் செய்தனர். மேலும், அதிரடி காட்டிய கிளாசெனும் இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 2-வது அரை சதத்தை வெறும் 23 பந்துகளில் பூர்த்தி செய்தார்.

இறுதியாக, ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் 62 ரன்களும், அபிஷேக் சர்மா 63, கிளாசென் 34 பந்துகளில் 80 ரன்களும், மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பின் 278 என்ற இமாலய இலக்கை எடுப்பதற்கு மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.

Published by
அகில் R

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

13 minutes ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

1 hour ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

2 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

2 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

3 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

4 hours ago