#IPL2022: பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத்.. ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 5-ம் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்கம் முதலே ஹைதராபாத் அணி தனது விக்கெட்களை இழக்க தொடங்கியது. அந்தவகையில் கேன் வில்லியம்சன் 2 ரன்களும், அபிஷேக் சர்மா 9 ரன்களும், நிகோலஸ் பூரன் மற்றும் ராகுல் திரிபாதி ஒரு ரன் கூட அடிக்காமல் தனது விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய மார்க்கம் அதிரடியாக ஆட, அவரையடுத்து களமிறங்கிய அப்துல் சமத் 4 ரன்களிலும், சிறப்பாக ஆடிய ரோமரியோ 24 ரன்களும், அதிரடியாக ஆடிவந்த வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் சஹல் தலா 3 விக்கெட்களும், பிரசித் கிருஷ்ணா மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

2 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

4 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago