Hyderabad broke RCBs 11-year record [File Image]
MIvsSRH : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மட்டுமே பறந்து கொண்டு இருந்தது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.
277 ரன்கள் அடிப்பது எல்லாம் டி20 கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் இல்லை. ஆனால், ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி இத்தனை ரன்களை குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சாதனையையும் படைத்தது பெங்களூர் அணியின் சாதனையையும் முறியடித்து இருக்கிறது. அது என்ன சாதனை என்றால் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனை தான்.
இதற்கு முன்னதாக கடந்த 2013-ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 263 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகம் ரன்அடித்த அணி என்ற சாதனையை வைத்து இருந்தது. தற்போது 11 ஆண்டுகால அந்த சாதனையை மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி முறியடித்து அதிகம் ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்தது இருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகம் ரன்கள் அடித்த அணிகள்
மேலும், நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 278 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிவரை போராடி 20 ஓவருக்கு 5 விக்கெட்டுகள் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…