இன்று ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை..!!

Published by
பால முருகன்

இன்று நடைபெறவுள்ள 2 வது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது.

இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது.  இந்த இரண்டு அணிகளும் இதுவரை 18 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியதில் 11 முறை ஹைதராபாத் அணியும், 7 முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 போட்டிகள் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3  இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் : 

பிரித்வி ஷா, ஷிகா் தவன், ஸ்டீவன் ஸ்மித், லலித் யாதவ், ரிஷப் பந்த் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மயா், மாா்கஸ் ஸ்டோனிஸ், அஸ்வின், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வாா்னா் (கேப்டன்), ஜானி போ்ஸ்டோ, கேன் வில்லியம்சன், விராட் சிங், கேதாா் ஜாதவ், விஜய் சங்கா், அபிஷேக் சா்மா, ரஷித் கான், புவனேஸ்வா் குமாா், சித்தாா்த் கௌல், கலீல் அஹமது.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

7 minutes ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

19 hours ago