ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, பெங்களூர் அணி முதலில் இறங்கி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன் எடுத்தார். 150 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரராக டேவிட் வார்னர், விருத்திமான் சஹா இருவரும் களமிறங்கினர். களம் இறங்கிய வேகத்தில் விருத்திமான் சஹா ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய மனிஷ் பாண்டே, வார்னர் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த மனிஷ் பாண்டே 38 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற டேவிட் வார்னர் நிதானமாக விளையாடி அரைசதம் எடுத்து 54 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹைதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…